Wednesday, May 1, 2013

குப்பைகளை கழிக்கும் முறை -2 - ஈர பதம் உள்ள குப்பைகள் (குப்பைகளை சரியான முறையில் வெளியே கொட்டுவது)

இதை படிக்கும் முன் இதன் முதல் பாகம் Waste Management - குப்பைகளை கழிக்கும் முறை-1 படித்து பின் இதை படிக்கவும்.

Wet waste (ஈர பதம் உள்ள குப்பைகள்)
    • சமைத்த உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • சமைக்காத உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • பழங்களின் கழிவுகள் ,தோல்கள் ,விதைகள்  
    • காய்கறி கழிவுகள் 
    • பூஜையறை இல் இருந்து கழியும் பூக்குப்பைகள் 

இந்த மாதிரியான குப்பைகள் தினமும் நம் வீட்டில் இருந்து கழியும் .இதோடு இனிமேலாவது பிளாஸ்டிக் குப்பைகளையோ மற்ற குப்பைகளையோ  கலக்காமல் இருப்போம்.

இந்த குப்பைகளை  இரண்டு வகைகளில் கழிக்கலாம்.

1)குப்பைகளை சரியான முறையில் வெளியே கொட்டுவது.
2)இந்த வகை குப்பைகளை compost (மக்க வைத்து உரமாக மாற்றுவது ) செய்து நம் வீட்டு தோட்டங்களில் பயன்படுத்துவது.

இரண்டாவது முறை யில் குப்பைகளை கழிப்பது எல்லோராலும் சாத்தியபடாது.அதனால் முதலில்  முறையாக இந்த குப்பைகளை எப்படி வெளியே கொட்டுவது என்று பார்ப்போம் .

செய்ய வேண்டியது :

1)அடுப்பங்கரைக்கு என்று தனியாக ஒரு குப்பை தொட்டி வைத்து கொள்ளுங்கள் .
2) மற்ற குப்பைகளை இதோடு கலக்க கூடாது.
3) பிளாஸ்டிக் கவர்களை குப்பைதொட்டிக்குள் வைத்து அதன் மேல் குப்பை கொட்டுவதை  தவிர்ப்போம்.
4) குப்பைகளை பிளாஸ்டிக் கவர்களில் கொட்டி வெளியே கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.


எல்லாம் சரிதான்.பிளாஸ்டிக் கவர் வைக்காமல் குப்பை கொட்டினால் அசுத்தமான குப்பை தொட்டியை யார் கழுவுவது என்று கேட்பவர்களும் இருப்பார்கள்.அதற்க்காகதான் கவர் வைத்து போடுகிறோம் என்பார்கள்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் .நம் வீட்டு குப்பைதானே அது.நாம் சாப்பிட்ட கழிவுகளும் காய்கறி கழிவுகளும் தானே அதில் ஒட்டி கொண்டு இருக்கும்.கொஞ்சம் மெனக்கிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டால் ஆயிற்று.அதற்கு மாற்றாக 800 வருடங்கள் ஆனாலும் மக்காத ஒரு பிளாஸ்டிக் கவரை தினம் தினம் நாம் மண்ணில் கொட்டுகிறோம்.

எனவே இனி படத்தில் உள்ளது போல ஈர பதம் உள்ள குப்பையை கவர் வைக்காமல் நேரிடையாக தொட்டியில் கொட்டுவோம்.பின் கழுவி கொள்ளலாம்.



இல்லை என்றால் கீழ் கண்ட படத்தில் உள்ளது போல ஒரு செய்தி தாளை கூம்பு (cone ) வடிவில் வைத்து குப்பை தொட்டியில் வைத்து அதன் மேல் குப்பைகளை கொட்டி பின் வெளியில் கொட்டலாம்.இந்த முறையில் கழுவ கூட அதிகம் தண்ணீர்  கூட செலவழியாது.




ஒரு சின்ன முயற்சி தானே.முயன்று பார்க்கலாம்.இயற்க்கைக்கு நம்மால் ஆன ஒரு சின்ன உதவி.உங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூட இதே போல செய்ய வலியுறுத்துங்கள் .

பதிவு தொடரும்....
FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog

ஸ்டென்சில் ரங்கோலி

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.சில அலுவல்களின்  காரணமாக வலைப்பூ பக்கம் வரவே முடியவில்லை.

அண்மையில் எங்கள் டவுன்ஷிப்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.விழா நடக்கும் இடத்தின் முகப்பில் கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் எளிதாகவும் ரங்கோலி போட திட்டமிட்டோம்.எளிதாக என்ற டன் எனக்கு தோன்றியது ஸ்டென்சில் வைத்து போட்டு விடலாமே என்றுதான்.

ஸ்டென்சில் என்று நான் சொல்வது நீங்கள் ஊர் பக்கம் நடக்கும் exhibition களில் பார்த்திருக்க கூடும்.கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல மாவு சல்லடைகளில் அழகிய கோலங்கள்,design கள் வரைந்து விற்று  கொண்டிருப்பார்கள்.  

Image: flicker
என்னிடம் இது போல ஸ்டென்சில் நான்கு இருந்தது.என் தோழி மீராவிடம்  இரண்டு இருந்தது.


கலர் பொடியும் ரெம்பவே எளிதான ஒரு design னும் தயார் செய்து கொண்டோம்.

நான், என் அம்மா,என் தோழிகள் மஞ்சு,மீரா,ராதிகா வும் இணைந்து விழாவிற்கு போட்ட கோலம் உங்கள் பார்வைக்கு.




அம்மா 


வித்தியாசமாக இருந்ததால் அனைவரின் பாராட்டையும் பெற்றது எங்கள் கோலம்.அதோடு மிகவும் குறைந்த நேரமே பிடித்தது.

இதையும் பாருங்க 

FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...