Saturday, December 1, 2012

நிகிலா தங்கதுரை யின் கைவண்ணம்:பழைய டி shirt களில் இருந்து ஒரு cushion கவர்


நிகிலாதங்கதுரை எனது சினேகிதி.இல்லத்து அரசி . கைவினை பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.நீண்ட நாட்களாக கனவு இல்லத்திற்குக்காக ஒரு கைவினை செய்து காமிக்குமாறு கேட்டிருந்தேன்.அதனை தொடர்ந்து அவர் அழகாக ஒரு recycling  / upcycling craft  செய்து அனுப்பி இருக்கிறார்.

தேவையான பொருட்கள் 
ஒரு பழைய T  shirt 
கத்திரிக்கோல் 

ஒரு பழைய  shirt இன் உடம்பு பகுதியை வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.பின் உங்கள் cushion அளவை விட அதிகமாக நான்கு பக்கமும் இரண்டு இன்ச் விட்டு கத்திரியுங்கள். 

ஒரு பக்கத்தை மட்டும் விட்டு மற்ற மூன்று பக்கங்களிலும் படத்தில் காண்பித்திருப்பது  போல முடிச்சிட வேண்டும் .(மேற்பக்கம் stripe um கீழ்புறம் உள்ள stripe யும் சேர்த்து )



இப்போது cushion நை நடுவில் வைத்து மீதி உள்ள பக்கத்திலும் கட் பண்ணின stripes யை முடிச்சு இட்டு கொள்ளுங்கள். சுற்றிலும் இதே போல முடிச்சு இட்டு முடித்தால் தையலே தேவை இல்லாத அழகிய cushion கவர் எளிதில் தயார்.


கீழே என்னை கவர்ந்த அவரது மற்ற கைவேலைபாடுகளை பகிர்ந்து இருக்கிறேன்.

இது பழைய இரண்டு pant களில் இருந்து கத்தரித்து patch  வொர்க் செய்து நிகிலா அவர்கள் செய்த இன்னொரு cushion கவர் 


வட்ட குஷன்
ஸ்மாக்கிங் 
ஸ்மாக்கிங் குஷன் மீது ஸ்மாக்கிங் mobile பவுச்
சின்ன சின்ன சதுர துணியை சேர்த்து தைத்த cushion கவர்

அழகிய மொபைல் pouch 
ஜீன்ஸ் துணியில் ஒரு மொபைல் pouch 
puppy
வுல்லன் கோழிகுஞ்சு
ரெண்டு இன்ச் குட்டி stool
இந்த மாதிரி சின்ன சின்ன கைவேலைகள் தானே நம்மை உயிர்ப்புடன்  வைத்திருகிறது.வாழ்த்துக்கள் நிகிலா...

Monday, November 26, 2012

வெண்கல விளக்குகள் விளக்க ஒரு எளிய வழி


கார்த்திகை வந்தாச்சு.எல்லா  வேலைகளுக்கும் நடுவே வெண்கல விளக்குகளை பள பள என்று விளக்குவது ஒரு பெரிய வேலை தானே...அதுவும் நிறைய விளக்குகள் இருந்தால் அதிக அளவு நேரம் இதற்கே செலவிட வேண்டி இருக்கும்.அந்த நேரத்தை குறைப்பதற்க்கான ஒரு எளிய வழி  தான் இந்த பதிவு.

இந்த வழி அவள்விகடனிலையோ சிநேகிதிலையோ படிச்சா நினைவு...இந்த முறை உபயோகபடுத்தி பார்த்தேன்.

தேவையான பொருட்கள் :
கையளவு புளி 
ஒரு பெரிய பாத்திரம் 

முதலில் கையளவு புளி எடுத்து  கொண்டு பாத்திரம் முழுக்க நீர் நிரப்பி அதில் கரைத்து கொள்ளவும்.

பின் அனைத்து விளக்குகளையும் இந்த நீரில் ஊற வைக்கவும்.


ஒரு நாள் இரவு முழுவதும் ஊறலாம்.

  காலையில் விளக்குகளை எடுக்கும் போதே நல்ல பள பளப்பாகத்தான் இருந்தது.பின் நீங்கள் உபயோகிக்கும் பவுடர் (நான் பீத்தாம்பரி உபயோக படுத்தினேன்) கொண்டு லேசாக தேய்த்து கழுவி விடுங்கள்.


எப்போதும் ஆகும் நேரத்தை விட பாதி கூட ஆக வில்லை.

அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.

Thursday, November 15, 2012

கனவு இல்லத்தின் பதிவுகள் கொண்ட புத்தகம்

சினேகிதியில் வந்த கனவு இல்லத்தின் பதிவுகள் கொண்ட 32 பக்க துணை புத்தகம் இதோ உங்கள் பார்வைக்கு 

word  வடிவில் பார்க்க 

https://docs.google.com/open?id=0B48AKfLIF1XNaTNreEFUX2xSa2c

pdf வடிவில் பார்க்க 

Wednesday, November 7, 2012

பூக்கோலம்

தீபாவளிக்கு எல்லோரும் ரெடி ஆகிட்டே இருக்கீங்களா...
புது துணி , பட்டாசு க்கு அப்புறம் தீபாவளி ஸ்பெஷல் கோலம் வேற இருக்கே...
உங்களுக்காக அதிக நேரம் எடுக்காம எளிதா போடற பூக்கோலங்கள் இந்த பதிவுல ஷேர் பண்ணுறேன்.

இந்த கோலங்கள் அனைத்தும் எங்க டவுன்ஷிப்பில் நடந்த ஒரு போட்டியில் போடப்பட்டது.     










இதையும் பாருங்க 

Sunday, November 4, 2012

t ஷர்ட் stenciling

என்  கணவர் சமீபமா ஒரு t ஷர்ட் வாங்கனும்னு இணையத்துல தேடிட்டு இருந்தார்.யாரோ wrestling பிளேயர் jhon cena வாம்...அவர் டிசைன் பண்ணின ஷர்ட் போல .அதுவும் particular wording வேணும்னு பார்த்திட்டு இருந்தார்.ஆனா t ஷர்ட் black கலர் ல மட்டும் தான் இருந்துது...இவரும் நீல கலர் ல தேடி பார்த்துட்டு கிடைக்கலன்னு வேலைக்கு கிளம்பி போய்ட்டார்.அது என்ன அப்படி ஒரு ஊர்ல இல்லாத ஷர்ட் ன்னு பார்த்தா இதோ இந்த படத்தில இருக்கறதுதான்... 


சரி வேலை முடிஞ்சு வரது குள்ள நம்மளே ஒரு surprise கொடுக்கலாம்னு பண்ணினதுதான் இந்த DIY ப்ராஜெக்ட்.   
வீட்டில் இருந்த ஒரு சில பாக்கிங் அட்டைகள் எடுத்து அதில் படத்தில் உள்ள wordings யை அப்படியே எழுதி கொண்டேன்.அட்டை கொஞ்சம் தடிமனாக இருப்பது நல்லது.வெறும் பேப்பரில் என்றால் நகராமல் இருக்க பின் செய்ய வேண்டி இருக்கும். 


பின் cutter கொண்டு படத்தில் காண்பித்து போன்று உள் பக்கமாக  நறுக்கி எடுக்க வேண்டும்.














இப்போது ஸ்டென்சில் கள்  தயார்  .











இதை வீட்டில் இருந்த ஒரு நீல கலர் ப்ளைன் t ஷர்ட் மீது வைத்து வெள்ளை வண்ணத்தை brush கொண்டு தீட்டினேன்(acrylic colors / Fabric paint).ப்ளூ அண்ட் வைட் beautiful sight இல்லையா..அதுனால தான் இந்த கலர் combination . !!!

அடியில் அதாவது சட்டையின் உள்பக்கம் சில செய்தி தாள்களை மடித்து வைத்து கொள்ள வேண்டும்.அப்போது நீங்கள் முன்பக்கம் செய்யும் கலர் சட்டையின் பின் பக்கம் படியாமல் இருக்கும்.


ஸ்டென்சில் ஐ எடுக்காமல் இரண்டு மூன்று முறை கலரை கோட் செய்து கொண்டேன்.இப்போது t ஷர்ட் தயார்.இதை ஒரு நாள் முழுவதும் காய விடுங்கள்.நன்றாக காய்ந்த உடன் சட்டையை உள் பக்கமாக திருப்பி மிதமான சூட்டில் அயன் செய்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான் .துவைத்தாலும் இது போகாது.ஆனால் நேரடியாக அயன் செய்யாமல் ஒவ்வொரு முறையும் திருப்பி போட்டு அயன் செய்ய வேண்டும்.



வீடு திரும்பிய கணவருக்கு நிஜமாவே ரெம்ப surprise ...பின்னே அந்த சட்டை விலை 1500 ஆச்சே...நான் வெறும் நாலு டப்பா வெள்ளை கலர் fabric பெயிண்ட் மட்டும் வைச்சு அவர் ஆசையை நிறைவேத்திருக்கேனே  ..(ஓரளவுக்காவது ஒரிஜினல் சட்டை மாறி தானே வந்திருக்கு?)



சிம்பிள் ஐடியா தானே..
குழந்தைங்க t ஷர்ட் ளையும் நீங்களே டிசைன் பண்ணலாம்.ஏழு கலர் ல ப்ளைன் t shirts வாங்கி ஒவ்வொரு சட்டையிலும் அந்த சட்டை வண்ணத்தின் பெயர், ஒரு கிழமையின் பெயர்,ஒரு பழத்தின் பெயர்,ஒரு காய்கறியின் பெயர் ஸ்டென்சில் பண்ணி கொடுத்தீங்கன்னா விளையாட்டா அவங்க எல்லா ஸ்பெல்லிங்கும் படிச்சுக்குவாங்க.வண்ணங்களையும் தெரிஞ்சுக்குவாங்க.      

Friday, November 2, 2012

கனவு இல்லம் ஐடியாக்கள் மஞ்சுளா ரமேஷ் சிநேகிதியில் !!!!

கனவு இல்லம் followers , விசிட்டர்ஸ் க்கு   ஒரு குட் நியூஸ்...

நம் கனவு இல்லம் பிளாக் மற்றும்  facebook பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஐடியாக்கள் மஞ்சுளா ரமேஷ் சிநேகிதி புத்தகத்தில் தனி இணைப்பாக வந்திருக்கிறது...எல்லோரும் வாங்கி படியுங்கள்...நானே இன்னும் பார்க்கல..புத்தகம் கொரியர் ல வந்துட்டே இருக்கு...  

சில சமயம் சில வீடுகளுக்குப் போகும்போது அத்தனை அழகாக அலங்கரித்திருப்பார்கள். 'ம்... நமக்கும் இவர்களை மாதிரி நிறைய பணம் இருந்தா நாமளும் இதை மாதிரி பண்ணலாம்' என பெருமூச்சு விடுவோம். வீட்டை அழகு வீடாக்க பெரியதாக பணம் தேவையில்லை. ஐடியா இருந்தால் போதும். இதோ நமது சினேகிதி கோமதி அழகழகான ஐடியாக்களைத் தருகிறார் பாருங்கள்... இவற்றைப் பின்பற்றி அனைவரையும் பிரமிக்க வையுங்கள்... 

மேலும் விவரங்களுக்கு நவம்பர் மாத மஞ்சுளா ரமேஷின் சினேகிதி இதழைப் வாங்கி படியுங்கள்

எல்லோரும் ஸ்வீட் எடுத்துகோங்க....

Monday, October 22, 2012

கலசத்தை அம்மனாக அலங்கரிக்கும் முறை

தேவையான பொருட்கள் 

ஒரு வெண்கல செம்பு அல்லது எவர்சில்வர் செம்பு
மாவிலைகள்
குடுமி உள்ள தேங்காய்
அம்மன் முகம் 
Blouse துணிகள் - இரண்டு அல்லது மூன்று...


முதலில் ஒரு பலகையை நன்றாக கழுவி துடைத்து அதன் மேல் சிறு கோலம் இட்டு கொள்ளுங்கள்.மற்ற பூஜை சமயங்களில் இந்த பலகை மேலேயே அம்மன் அலங்கராம் செய்யலாம்.

 

இது சரஸ்வதி பூஜை ஆதலால் வீட்டில் குழந்தைகளின் புத்தகங்கள்,பெரியவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் போன்றவற்றை அடுக்கி பின் அம்மன் அலங்காரம் செய்ய வேண்டும் .இதற்கு ஏடு அடுக்குதல் என்று பெயர்.பின் இதனை ஒரு துணியால் மூடி விட வேண்டும். 

சரஸ்வதி பூஜை அன்று பூஜையில் வைத்து பூஜிக்கும் புத்தகங்களை அன்று முழுவதும் பூஜையிலேயே வைக்க வேண்டும்.இதன் உள்ளே வைத்த புத்தகங்களை மறு நாள் விஜய தசமி  அன்று பூஜை செய்து பின்னரே பிரிக்க வேண்டும்.இதற்கு ஏடு பிரித்தல் என்று பெயர்.

 


இதன் மேலே வெண்கல செம்பை நீர் இட்டு வைத்து,மாவிலை நடுவில் வைத்து பின்னர் தேங்காய் வைக்க வேண்டும்.அம்மன் முகம் கொண்டு தேங்காய் குடுமியில் கட்ட வேண்டும்.

அம்மன் முகம் இல்லாதவர்கள் குடுமி பகுதியில் மஞ்சளையும் சந்தனத்தையும் கொண்டு சாற்றி மூக்கு போன்று பிடித்து கொள்ளவும்.கண் அமைப்பதற்கு இரு சிறிய பூண்டு எடுத்து கொண்டு மூக்கின் மேல் பகுதியில் வைக்கவும்.பூண்டின் மேலே மிளகு வைத்து அமுக்கி விடவும்.குங்குமம் கொண்டு உதட்டு பகுதி வரைந்து கொள்ளவும்.


 


செம்பின் வாய் பகுதியில் ஒரு கயறு கட்டவும்.ஒரு துணியை நன்றாக கொசுவம் வைத்து மடித்து இந்த கயிறில் சொருகி நன்றாக விரித்து விடவும்.இன்னொரு துணி கொண்டு படத்தில் காண்பித்த படி அமைக்கவும்.நான் blouse களில்  border வைக்க பயன்படுத்தும் துணி வைத்து அலங்கரித்துள்ளேன்.




இப்போது பூக்கள் கொண்டும்,நகைகள் அணிவித்தும் மேற்படி அலங்காரம் செய்யலாம்.  



 இப்போது அழகான அம்மன் உங்கள் வீட்டிலேயே எழுந்து அருளி இருப்பதாக ஐதீகம் . இதே முறையில் வர லக்ஷ்மி பூஜை மற்றும் அம்மனை மையமாக வைத்து வரும் பூஜைகளுக்கு அம்மன் அலங்காரம் செய்யலாம்.


படம் மட்டும் வைத்து பூஜை செய்வதற்கு பதில் இந்த முறையில் செய்யலாம்.விளக்கை எப்படி அம்மனாக அலங்கரிப்பது என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் படங்களுடன் விளக்குகிறேன்.


அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.

Friday, October 19, 2012

cushion கவர் சுவர் அலங்காரம்

சமீபத்தில் ஐந்து cushion கவர்கள் வாங்கினேன்.வாங்கியதில் இருந்தே இதை cushion கவர் ஆக பயன் படுத்த தோன்றவே இல்லை!!!.வேறு என்ன பண்ணலாம் என்று யோசித்த போது வந்தது இந்த wall hanging ஐடியா.  

தேவையான பொருட்கள் 
அழகிய ஐந்து cushion கவர்கள்.
கைதையல் போட தேவையான நூல் கண்டு.
கொஞ்சம் கனமான அட்டைகள் 

 cushion கவர்கள் வாங்கிய போது
 நான்கையும் இணைத்து கை தையல் போட்டுள்ளேன்.(பிறகு மனசு மாறினால் cushion கவர் ஆ கூட உபயோக படுத்தலாமேன்னு ;-))
 முன் பக்கம் 
 மீதமுள்ள கவர் யை நான்கு பக்கமும் மடித்து பின் செய்துள்ளேன்.
 அதன் முன் பக்கம் 
 மடித்த ஐந்தாவது cover ஐ படத்தில் காண்பித்து போல நடுவில் வைத்து பின் செய்துள்ளேன்.
 ஒரு பழைய ஜன்னல் கொசுவலை ரெம்ப நாட்களாக என்னிடம் சும்மாவே இருந்து வந்தது.அதை அடியில் வைத்து நான்கு புறமும் மடித்து பின் செய்துள்ளேன்.



wall hanging ஆக தொங்க விடும் போது பக்கவாட்டில் மடியாமல் இருபதற்க்காக shoe box அட்டையை நான்கு புறமும் வைத்துள்ளேன்.
எதாவது ஒரு முனையில் சின்ன நூலை கொண்டு ஆணியில் தொங்க விட ஒரு வளையம் போன்று செய்து கொள்ளவும் . கொசு வலை,அட்டை டப்பாக்கள் recycle செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி .
குறைந்த செலவில் அழகிய wall hanging தயார் (cushion கவர்கள் 350 ரூபாய்க்கு வாங்கினேன்) . 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...